“இசைஞர் - 2017” இசைக்கருவிகள் இசைக்கும் போட்டி நாளை முதல் துவக்கம்!

இசைக் கருவிகளை இசைக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக “இசைஞர்-2017” எனும் போட்டிக்கு கோவை நன்னெறிக் கழகம் சார்பில் சரோஜினி நடராஜ் டிரஸ்ட் மற்றும் தி இந்து நாளிதழ் ஆகியன இணைந்து நடத்துகின்றன. கிக்கானி பள்ளி வளாகத்தில் உள்ள சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சிக்கு நித்யஸ்ரீ மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

இப்போட்டியில் கலந்துகொள்ள கோவை, திருப்பூர் மற்றும் நிலகீரி மாவட்டங்களைச் சேர்ந்த 440 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். போட்டியாளர்களுக்கான தகுதிச் சுற்றுகள் இன்று (ஜூலை 29 - சனிக்கிழமை) காலை 9 மணி முதல் ஆரம்பமாகின்றன.

இறுதிச் சுற்று நாளை (ஜூலை 30 - ஞாயிற்றுகிழமை) மாலை 5:00 மணிக்கு நடைபெற இருக்கிறது. இப்போட்டிகளின் நடுவர்களாக அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தின் இசைத்துறைத் தலைவர் ஜனக மாயாதேவி மற்றும் அவரது சக இசை ஆசிரியர்கள் செயல்பட இருக்கிறார்கள்.

பரிசளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சில்க்ஸ் இயக்குனர் கே.விநாயகம் மற்றும் பிரபல கர்நாடக சங்கீத பாடகி கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். பரிசளிப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை சென்னை சில்க்ஸ், ரேடியோ சிட்டி, சிம்ப்ளிசிட்டி, காட்ஸ்வில்லா ரிசார்ட், உடுமலை.காம், ஃபன் சிட்டி ஆகியவை இணைந்து நடத்துகின்றன. அனுமதி இலவசம். 

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...