“இசைஞர் - 2017” இசைக்கருவிகள் இசைக்கும் போட்டி நாளை முதல் துவக்கம்!

இசைக் கருவிகளை இசைக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக “இசைஞர்-2017” எனும் போட்டிக்கு கோவை நன்னெறிக் கழகம் சார்பில் சரோஜினி நடராஜ் டிரஸ்ட் மற்றும் தி இந்து நாளிதழ் ஆகியன இணைந்து நடத்துகின்றன. கிக்கானி பள்ளி வளாகத்தில் உள்ள சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சிக்கு நித்யஸ்ரீ மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

இப்போட்டியில் கலந்துகொள்ள கோவை, திருப்பூர் மற்றும் நிலகீரி மாவட்டங்களைச் சேர்ந்த 440 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். போட்டியாளர்களுக்கான தகுதிச் சுற்றுகள் இன்று (ஜூலை 29 - சனிக்கிழமை) காலை 9 மணி முதல் ஆரம்பமாகின்றன.

இறுதிச் சுற்று நாளை (ஜூலை 30 - ஞாயிற்றுகிழமை) மாலை 5:00 மணிக்கு நடைபெற இருக்கிறது. இப்போட்டிகளின் நடுவர்களாக அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தின் இசைத்துறைத் தலைவர் ஜனக மாயாதேவி மற்றும் அவரது சக இசை ஆசிரியர்கள் செயல்பட இருக்கிறார்கள்.

பரிசளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சில்க்ஸ் இயக்குனர் கே.விநாயகம் மற்றும் பிரபல கர்நாடக சங்கீத பாடகி கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். பரிசளிப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை சென்னை சில்க்ஸ், ரேடியோ சிட்டி, சிம்ப்ளிசிட்டி, காட்ஸ்வில்லா ரிசார்ட், உடுமலை.காம், ஃபன் சிட்டி ஆகியவை இணைந்து நடத்துகின்றன. அனுமதி இலவசம். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...