எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது நீலகிரி ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்


நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இன்று (ஜூலை 30) மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில், ராஜ்யசபா உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன், பாராளுமன்ற உறுப்பினர் சி.கோபாலகிருஸ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வரும் செப்டம்பர் 11ம் தேதியன்று நடைபெறவுள்ள பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நடைபெற்றது.



ஆலோசனைக் கூட்டத்தில் பாரத ரத்னா எம்.ஜி.ஆர்-யின் நூற்றாண்டு விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாகவும், துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும், அதற்கான கோப்புகளை விரைவில் சமர்ப்பிக்குமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.



முன்னதாக உதகை ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சிறப்பு சாதனை விளக்கப் புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.



அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலான மாபெரும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.



இம்முகாமில் சிறப்பு மருத்துவர்களாக இருதய நோய் நிபுணர், பல் பரிசோதனை நிபுணர், கண் பரிசோதனை நிபுணர் மற்றும் பொது நல மருத்துவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பரிசோதனை செய்தனர். இம்முகாமில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றனர்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...