பயிர் காப்பீட்டு திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கைவிடக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

கோவையில் விவசாய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கைவிடக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஏர்கலப்பையில் மனிதர்களை பூட்டி தார் சாலையில் உழும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏர்கலப்பையில் மனிதர்களை பூட்டி தார் சாலையில் உழும் நூதன போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஈடுபட்டனர். அப்போது விவசாய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கைவிட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டில் கடன் வழங்குவதை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மட்டுமே பயிர் கடன் வழங்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனங்களிடம் இது ஒப்படைக்கப்பட்டால், போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...