குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தந்தையால் பரபரப்பு

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி சிறு சிறு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் தன்னை சிலர் காலி செய்ய வலியுறுத்தி மிரட்டுவதாகக் கூறி பாதிக்கப்பட்ட ஒருவர் தனது நான்கு குழந்தைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை போத்தனூர் அடுத்த நாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மூன்று மகள் மற்றும் ஒரு மகனுடன் அப்பகுதியிலுள்ள புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பு அமைத்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அப்பகுதியில் புற்று கோவில் உள்ளதால் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று கூறி சிலர் ராஜாவை மிரட்டியதாக கூறப்படுகிறது.



எனவே வீட்டை காலி செய்யுமாறு அவர்கள் கூறவே போத்தனூர் காவல்நிலையத்தில் ராஜா புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த அவர் தனது நான்கு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டார்.



இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்படவே காவல்துறையினர் உடனடியாக அவர்களை மீட்டு பந்தையசாலை காவல்நிலையம் அழைத்து சென்றனர். மிரட்டல் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தனக்கு உரிய தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அப்போது அவர் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...