எர்ணாகுளம்- வேளாங்கண்ணிக்கு பொள்ளாச்சி வழியே ஆக.,31 முதல் சிறப்பு ரயில் இயக்கம்


ஓணம் பண்டிகை வரும் செப்.,3ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு எர்ணாகுளம் - வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 31 முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என பாலக்காடு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை எர்ணாகுளம் - வேளாங்கண்ணிக்கு இரவு 9 மணிக்கும், செப்டம்பர் 1 முதல் 8-ம் தேதி வரை வேளாங்கண்ணி - எர்ணாகுளத்திற்கு மதியம் 2:20 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 7-ம் தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் காலை 10:15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

அதேப்போல், செப்டம்பர் 1 முதல் 8-ம் தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் காலை 3:30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். 

ரயில் செல்லும் வழித்தடங்கள்:

ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய வழித்தடங்களில் ரயில் நின்று செல்லும்.

அதில் ஈரடுக்கு ஏ.சி., மூன்றடுக்கு ஏ.சி., 7 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 பொது மற்றும் 2 நிலை பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரயில் உபகரண பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும் என அறிவித்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...