எர்ணாகுளம்- வேளாங்கண்ணிக்கு பொள்ளாச்சி வழியே ஆக.,31 முதல் சிறப்பு ரயில் இயக்கம்


ஓணம் பண்டிகை வரும் செப்.,3ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு எர்ணாகுளம் - வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 31 முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என பாலக்காடு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை எர்ணாகுளம் - வேளாங்கண்ணிக்கு இரவு 9 மணிக்கும், செப்டம்பர் 1 முதல் 8-ம் தேதி வரை வேளாங்கண்ணி - எர்ணாகுளத்திற்கு மதியம் 2:20 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 7-ம் தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் காலை 10:15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

அதேப்போல், செப்டம்பர் 1 முதல் 8-ம் தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் காலை 3:30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். 

ரயில் செல்லும் வழித்தடங்கள்:

ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய வழித்தடங்களில் ரயில் நின்று செல்லும்.

அதில் ஈரடுக்கு ஏ.சி., மூன்றடுக்கு ஏ.சி., 7 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 பொது மற்றும் 2 நிலை பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரயில் உபகரண பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும் என அறிவித்துள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...