கோவையில் சிறப்புப் பிரார்த்தனைகளுடன் நீர்நிலைகள் அருகே ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

ஆடி பெருக்கு, ஆடி மாதத்தின் 18-வது நாளில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்த திருநாளன்று நீர் நிலைகள் அருகே வாழ்க்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இந்த சிறப்பு வழிபாட்டின் போது பொதுமக்களுக்கு எவ்வித சிரமங்களும் ஏற்படாத வகையில் புனித நதிகளுக்கும், குளங்களுக்கும் அருகே கட்டடைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காவிரி நதி மற்றும் அதன் கிளைகளான பவானி மற்றும் நொய்யல் ஆகியவற்றில் உள்ள அனைத்து ஆலய புனித ஆறுகளிலும் இந்த விழா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்படும்.



ஆடி 18 இந்த புனித நாளன்று, பாரம்பரிய முறையில் புதிதாக திருமணமானவர்கள் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்வினை மேற்கொள்ள அம்மனுக்கு பிரார்த்தனை செய்கிறார்கள். ஒரு பாரம்பரிய நடைமுறையில், அந்த தம்பதியினர் கூட்டாக தங்கள் திருமண மாலைகளை புனிதமான ஆறுகள் அல்லது குளங்களில், கோவில்களில் விட்டு விடுகின்றனர். 



சிலர், தங்களது முன்னோர்கள், உயிரிழந்த குடும்பத்தினர்களை வழிபடும் வகையிலும் கோவில் ஆறு, குளங்களில் இன்றைய தினம் வழிபடுவர். அப்போது, இலை மீது முறுக்கு, லட்டு உள்ளிட்ட காரம் மற்றும் இனிப்புகளை படையலிட்டு சிவப்பு நிற துணியுடன் கூடிய கருப்பு வளையல்கள் ஆகியவற்றை உயிரிழந்தோர் நினைவாக நதிநீரில் விட்டுச் செல்வர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...