ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயராது - சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா



திருச்சி ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை 20 ரூபாயாக, உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சி, பல்வேறு மாநில, மாவட்ட மக்கள் வந்து செல்வதற்கு சுலபமாக இருப்பதால், திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு, வருகைதரும், வெளிமாவட்ட, மாநில மக்கள், திருச்சி வழியாகத்தான் கடந்து செல்வது வழக்கம். அதோடு, வேளாங்கண்ணி, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை, கும்பகோணம் என ஆன்மிக பயணங்களுக்கும் திருச்சி வழியே செல்ல வேண்டும் என்பதால், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகளின் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும். 

இந்நிலையில், தற்போது பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை 20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட இந்த விலை உயர்வு, திருச்சி ரயில் நிலையத்தில் அமலுக்கு வந்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என ரயில்வே துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஈரோடு ரயில்வே இருபாலர் உயர்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா நிருபர்களிடம் கூறியதாவது: தெற்கு ரயில்வே கோட்டத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் உத்தேசம் இல்லை என்றும், தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சி ரயில் நிலையத்தில் மட்டுமே ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...