கோவையில் தனது இரண்டாவது ஸ்டோரைத் திறந்தது லைஃப்ஸ்டைல்

இந்தியாவின் மிகவும் விரும்பத்தக்க ஃபேஷன் இடமான லைஃப்ஸ்டைல், கோவையில் தனது புதிய ஸ்டோரை கோவை, பழைய சிவானந்தா மில்ஸ் பகுதியில் அமைந்துள்ள புரோசோன் மாலில் திறந்துள்ளது.



இந்த ஸ்டோரை லைஃப்ஸ்டைல் மார்க்கெட்டிங் பிரிவின் மூத்த துணைத் தலைவர் ஸ்ரீனிவாச ராவ் மற்றும் சில்லரைச் செயல்பாடுகள் தலைவர் சத்யநாராயணன் ஆகியோருடன் புகழ்பெற்ற நடிகை ரெஜினா காஸெண்ட்ரா திறந்து வைத்தார். இது கோவையில் லைஃப்ஸ்டைலின் இரண்டாவது மற்றும் நாட்டின் 62-வது ஸ்டோராகும்.



இதுகுறித்து லைஃப்ஸ்டைல் இண்டர்நெஷனல் (பி) லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் கபீர் லும்பா தெரிவிக்கையில், எங்களது முதல் ஸ்டோருக்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து கோவையில் எங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்துவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். புரோசோன் மாலில் எங்களது இரண்டாவது ஸ்டோருடன் நாங்கள் தொடர்ந்து தனித்துவமான ஃபேஷன் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் குறிப்பிடத்தக்க பொருட்கள் பட்டியல் ஆகியவற்றை அளிப்போம்" என்றார்.



நடிகை ரெஜினா காஸண்ட்ரா கூறுகையில், மிகுந்த துடிப்புமிக்க நகரமான கோவையில் லைஃப்ஸ்டைல் ஸ்டோரைத் திறப்பதில் உற்சாகம் அடைகிறேன். லைஃப்ஸ்டைல் என்பது எனது அனைத்து ஃபேஷன் தேவைகளுக்கு செல்லவேண்டிய ஃபேஷன் இடமாக உள்ளது. நவீன ஃபார்மல், கேஷ்வல் ஆடைகள், உபகரணங்கள் அவர்களது டிரெண்டியான பொருட்கள் தொடங்கி நவீன ஆடைகள் வரை அனைத்தையும் நான் மிகவும் விரும்புகிறேன்" என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...