கோவை ரயில் நிலைய முகப்பில் உதகை ரயில்: வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை

கோவை ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், ரயில் நிலையத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பணிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

முன்னதாக ரயில் நிலையத்தின் முன்பு இருந்த பழைய முகப்பு அகற்றப்பட்டது. தற்போது அந்த இடத்தில் பழமையான உதகை ரயில் எஞ்சின் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.



1880-களில் உதகைக்கு மலைப்பாதை வழியே பயணித்த இந்த ரயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் எஞ்சின் வைக்கப்பட்டுள்ளதோடு, கோவை ரயில் நிலையத்தின் முன்புறம் 10 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இதனால், அங்கு இருக்கும் ஆட்டோ நிறுத்தும் இடத்தை காலி செய்யுமாறு ஆட்டோ ஓட்டுனர்களை ரயில்வே நிர்வாகம் கோரியுள்ளது.



ரயில்வே நிர்வாகத்தின் இந்த முடிவால் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளதாகவும், ரயில் நிலையத்திற்குள் வாடகை கார்களுக்கு நிறுத்த இடம் கொடுத்திருப்பது போல் ஆட்டோக்களை நிறுத்தவும் அனுமதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தற்போது கோவை ரயில் நிலையத்தின் முகப்பில் நிறுத்தப்பட்டுள்ள ரயில் எஞ்சினின் முன்புறம் ஆட்டோக்களை நிறுத்திய ஓட்டுநர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் ஆட்டோ ஓட்டுநர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை அப்புறப்படுத்தினர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...