மானிய ரத்தைக் கண்டித்து கோவையில் சிலிண்டருக்கு பாடை கட்டி போராட்டம்


சமையல் கேஸ் சிலிண்டருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருவதை வரும் மார்ச் மாதத்தோடு ரத்து செய்யப் போவதாக அறிவித்து உள்ளது. அதுபோல மாதம் தோறும் சிலிண்டருக்கான விலை 4 ரூபாய் உயர்த்தவும் எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு மகளிர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் கியாஸ் மானிய ரத்து செய்யும் கொள்கையை கண்டிக்கும் வகையில் மண் அடுப்பு மற்றும் விறகுகளுடனும், கியாஸ் சிலிண்டருக்கு பாடைகட்டியும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



அக்கட்சியின் மாவட்ட மகளிர் அணியின் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...