மானிய ரத்தைக் கண்டித்து கோவையில் சிலிண்டருக்கு பாடை கட்டி போராட்டம்


சமையல் கேஸ் சிலிண்டருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருவதை வரும் மார்ச் மாதத்தோடு ரத்து செய்யப் போவதாக அறிவித்து உள்ளது. அதுபோல மாதம் தோறும் சிலிண்டருக்கான விலை 4 ரூபாய் உயர்த்தவும் எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு மகளிர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் கியாஸ் மானிய ரத்து செய்யும் கொள்கையை கண்டிக்கும் வகையில் மண் அடுப்பு மற்றும் விறகுகளுடனும், கியாஸ் சிலிண்டருக்கு பாடைகட்டியும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



அக்கட்சியின் மாவட்ட மகளிர் அணியின் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...