தனியார் நிறுவன உரத்தால் நாசமான பயிர்கள்- ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்

கோவை அடுத்த சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பசேரி ஊராட்சி நல்லூர்பாளையம் பகுதியில் பந்தலில் விளையக் கூடிய காய்களுக்கு இயற்கை முறை மருந்து அதிக விளைச்சலை அளிக்கும் எனக் கூறி மதுரையை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம் அளித்த மருந்தினால் ஐந்தரை ஏக்கர் விவசாய நிலத்தில் பயிறிடபட்டிருந்த காய்கறிகள் முற்றிலும் காய்ந்து விட்டதாகக் கூறி இன்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.



கோவை அடுத்த சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பசேரி ஊராட்சி நல்லூர்பாளையம் பகுதியில் பந்தலில் விளையக் கூடிய பாகற்காய், புடலங்காய்களுக்கு இயற்கை முறை மருந்து உள்ளதாகவும், இந்த மருத்தை தெளித்தால் அதிக விளைச்சலை அளிக்கும் என கூறி மதுரையை தலைமையிடமாக கொண்ட சத்தியம் பயோ என்ற நிறுவனம் 2000 ரூபாய்க்கான மருந்துகளை விற்று உள்ளனர்.

விவசாய நிலங்களில் இந்த மருந்த்தை தெளித்த 3 நாட்களுக்குள் பயிறிடபட்டிருந்த பயிர்கள் முற்றிலுமாக காய்ந்து விட்டது. இது குறித்து அந்த நிறுவனத்தின் பிரதிநிதியிடம் முறையிட்டபோது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் ஐந்தரை ஏக்கர் நிலத்தில் பயிரிடபட்ட காய்கள் அனைத்தும் கருகிவிட்டது. 



இதனைத் தொடர்ந்து மீண்டும் அந்நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியை தொடர்பு கொண்டபோது தங்கது மருந்தால் தான் பயிர்கள் காய்ந்து விட்டது என விவசாயிகளிடம் எழுதி கொடுத்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் தங்களை மிரட்டி கடிதம் எழுதி வாங்கியதாக அந்த நிறுவனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் கருகிய பயிர்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...