சுகாதார துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கக் கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் மனு

நகராட்சி ஒப்பந்த சுகாதார துப்புரவுப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப் படி ஊதியம் வழங்கக் கோரி கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) மாவட்ட பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார், ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 151 தொழிலாளர்கள் சுகாதார துப்புரவுப் பணியில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். மேற்கண்ட தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி ஊதியம் வழங்குவது இல்லை. மாறாக ஆண்களுக்கு ரூ.220 மற்றும் பெண்களுக்கு ரூ.180 என்ற அடிப்படையில் இரண்டு விதமான ஊதியம் ஒப்பந்ததாரரால் வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் வங்கி மூலம் வழங்குவது இல்லை. மாறாக நேரடியாக வழங்கப்படுகிறது.

2016- 2017 ஆம் ஆண்டிற்கு குறைந்தபட்ச ஊதியமாக துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.300 வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதை இன்றைய தேதி வரையில் மேற்கண்ட பணியாளர்களுக்கு அமல்படுத்தப்படவில்லை. 

எனவே, இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆட்சியர் உத்தரவுப்படி அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் ரூ.300 வழங்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...