சுகாதார துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கக் கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் மனு

நகராட்சி ஒப்பந்த சுகாதார துப்புரவுப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவுப் படி ஊதியம் வழங்கக் கோரி கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) மாவட்ட பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார், ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 151 தொழிலாளர்கள் சுகாதார துப்புரவுப் பணியில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். மேற்கண்ட தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி ஊதியம் வழங்குவது இல்லை. மாறாக ஆண்களுக்கு ரூ.220 மற்றும் பெண்களுக்கு ரூ.180 என்ற அடிப்படையில் இரண்டு விதமான ஊதியம் ஒப்பந்ததாரரால் வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் வங்கி மூலம் வழங்குவது இல்லை. மாறாக நேரடியாக வழங்கப்படுகிறது.

2016- 2017 ஆம் ஆண்டிற்கு குறைந்தபட்ச ஊதியமாக துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.300 வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதை இன்றைய தேதி வரையில் மேற்கண்ட பணியாளர்களுக்கு அமல்படுத்தப்படவில்லை. 

எனவே, இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆட்சியர் உத்தரவுப்படி அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் ரூ.300 வழங்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...