தமிழக அரசு சார்பில் விரைவில் இலவச "டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்"



தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் மையமாக்கப்படுவதைத் தொடர்ந்து விரைவில் பொது மக்களுக்கு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் இலவசமாக "டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்" வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாதாவது:-

உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்பட உள்ளதால் பொதுமக்கள் யாரும் தனியார் நிறுவனங்களின் செட்டாப் பாக்ஸை விலை கொடுத்து வாங்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக செலுத்தி இணைப்பு துண்டிப்பு செய்வதை தவிர்க்கவும். மேலும், சமீப காலமாக ஒரு சில உள்ளூர் கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் உரிமை பெற்றுக்கொண்டு அரசு கேபிள் இணைப்பை துண்டித்தும், தனியாருக்கு சாதகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தியும், கட்டாயப்படுத்தியும், தனியார் செட்டாப் பாக்ஸ் வாங்க வற்புறுத்துவதாக புகார்கள் வருகின்றன.

அவ்வாறு யாரேனும் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் பெறுவதற்கு ஒவ்வொரு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் அவர்களது செட்டாப் பாக்ஸ் தேவைகளை வலைதளத்தில் www.tactv.in உள்நுழைவு (Login) செய்து CAF படிவத்தை தேர்வு செய்து அதில் சந்தாதாரர்களின் விவரங்கள், அதாவது பெயர், ஆதார் எண், பாலினம், மின் அஞ்சல், கைபேசி எண், பிறந்த தேதி, முகவரி, எஸ்டி செட்டாப் பாக்ஸ், எச்டி செட்டாப் பாக்ஸ் வீட்டு உபயோகத்திற்காகவா அல்லது வணிக பயன்பாட்டிற்காகவா போன்ற தகவல்கள் வரும் 2017 ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...