அறுவை சிகிச்சையில் திறமை அவசியம்- அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாட்டில் அரசு மருத்துவமனை டீன் பேச்சு

தமிழ்நாடு அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாடு முதன் முறையாக கோவை அரசு மருத்துவமனையால் இன்று அரசு மருத்துவக் கல்லூரியில் துவங்கியது.

இதன் முதல் நாள் அமர்வில், தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் காணொளிக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேலும், அந்த அறு சிகிச்சையின் போது மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்தனர். முன்னதாக இந்த காணொளிக்காட்சி நிகழ்ச்சி மற்றும் மாநாட்டினை கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் துவக்கி வைத்து உரையாற்றினார்.



அப்போது அவர் பேசுகையில், தற்போதுள்ள தொழில்நுட்ப மேன்மையடைந்த காலகட்டத்தில் அறுவை சிகிச்சைகள் குறித்து சமூகவளைதலங்களில் அதிகமாக காணொளிக்காட்சிகள் பகிரப்படுகின்றன. ஆனால், அதுகுறித்தான நம் சந்தேகங்களை நாம் அறிய முடிவதில்லை. இதுபோன்ற கருத்தரங்குகள் மூலமாகவே அறுவை சிகிச்சைகள் குறித்து நாம் அறிந்துகொள்ள முடியும். 



நமது பாரம்பரியத்தின்படி வேதகாலத்தில் சுமார் 3600 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவம் துவங்கி விட்டது. பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் அறுவை சிகிச்சை 600 ஆண்டுகளுக்கு முன்பே சுஸ்ருதா என்பவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவர்களுக்கு திறமை மிகவும் அவசியம். அது இதுபோன்ற கருத்தரங்குகளில் பங்கேற்பதன் மூலமே அதிகரிக்கும்".

இவ்வாறு கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் பேசினார்.

இந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவர்கள் பங்கேற்றனர். மேலும், கோவையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...