வங்கி தொடர் விடுமுறையால் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை- கோவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர்



வருகிற 12ம் தேதி (நாளை) இரண்டாவது சனிக்கிழமை, 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14-ம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, 15-ம் தேதி செவ்வாய்க் கிழமை சுதந்திர தினம் என தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகிறது. இந்த நான்கு நாட்கள் வங்கியில் தொடர் விடுமுறையை அடுத்து பண பரிவர்த்தனை குறித்து கோவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

பொதுமக்கள் தற்போது ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை மற்றும் பணம் பரிமாற்றம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது சமுதாயத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் அவர்கள் வங்கிக்கு வருவதை பெரும்பாலும் தவிர்கின்றனர். 

மாறாக, ஆன்லைன் மற்றும் அனைத்து வங்கிகள் மூலமாகவும் டெபாசிட் மெஷின்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் வைத்திருப்பதால், பொதுமக்கள் அங்கே சென்று பண பரிவர்த்தனை செய்து கொள்கின்றனர். இதில், பாமர மக்களில் ஒரு சிலர் மட்டுமே வங்கிக்கு சென்று பணம் பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.



மேலும், இதுபோன்ற பாமர மக்களுக்கு வங்கிகள் மூலமாகவும் பண பரிவத்தனை எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து விழிப்புணர்வும் கொடுக்கின்றோம்.

பொதுவாக, இதுபோன்ற தொடர் விடுமுறைகளின் போது பொதுமக்களுக்கு அவசர காலங்களில் சுலப முறையில் பணம் எடுக்கும் வகையில் ஏ.டி.எம் மெஷின்களில் அதிக அளவில் பணம் நிரப்பப்படும். 

ஏ.டி.எம்-களில் ஒரு நாட்களில் ரூபாய் 20,000 வரை ஒரு நபர் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல், 500, 2000 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் ஏ.டி.எம் மெஷின்களில் வைத்திருப்பதால், ஒருநபர் 2000 ரூபாயினை எடுக்கும் பொழுது மக்களுக்கு சிரமமின்றி அவை சில்லரை முறையில் 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களாகவும் கிடைக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் சில்லறை தட்டுப்பாடு பொதுமக்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு கோவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...