கோவை மாநகராட்சி ஆணையர் எழுதிய புத்தகம் ஒரு உணர்ச்சிமிகு நிகழ்வில் வெளியானது

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் எழுதிய புத்தகம் சனிக்கிழமையன்று அவரது தாயார் உமா கண்ணன் நினைவாக ஒரு உணர்ச்சிமிகு நிகழ்வில் வெளியிடப்பட்டது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் எழுதிய இரண்டாவது புத்தகம் "அதுவும் இதுவும்". இதனை விஜயா பதிப்பகம் பதிவிட்டுள்ளது. முன்னதாக, கோவில்பட்டி நகரில் துணை ஆட்சியராக இவர் பணியாற்றியபோது இவரது முதல் புத்தகம் வெளியிடப்பட்டது.



அரசு வேலை தொடர்பான அந்த முதல் புத்தகத்தினை விகடன் பதிப்பகம் வெளியிட்டது. 

விஜயகார்த்திகேயன் அவர்களின் தந்தை வன (நிர்வாகம்) கூடுதல் முதன்மை தலைமை ஆலோசகர், ஆர்.கண்ணன் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, தனது மகனின் வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளை விவரிக்கும் வகையில் உண்மை சம்பவங்களை விளக்கும் வகையில் இப்புத்தகம் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் மற்றும் கலைஞரான சிவக்குமார் வாழ்வில் முக்கிய 14 அம்சங்களை விளக்கினார். 



இதனைத்தொடர்ந்து, பேசிய சிறுதுளி வனிதா மோகன், க.விஜயகார்த்தியேன் அவர்களையும், அவரது புத்தகம் குறித்தும் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில், விஜயகார்த்திகேயன், மக்களை பல்வேறு விஷயங்களில் முன்னேற்றி வருவதாகவும், கற்றலை ஊக்கப்படுத்தி வருவதாகவும் வாழ்த்தி பேசினார்.

இதனை அடுத்து பேசிய க.விஜயகார்த்திகேயன், தனது நேரத்தை செலவழிப்பதற்கான ஒரு சிறந்த வழி புத்தகம் எழுதுவது என்றும், அந்த புத்தகம் பிறருக்கு பயனுள்ளதாக அமையும் வகையில் எழுதியதும் குறித்து விவரித்தார். தொடர்ந்து, இதுபோன்ற செயல்களில் மக்களும், படைப்பாளர்களும் ஈடுபடும்போது அவை மக்கள் வாழ்வில் முன்னேற்றத்திற்கு எடுத்துச் செல்லும் என்று கூறினார்.



மேலும், சமூகத்தில் உள்ள மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் இப்புத்தகத்தை எழுதியுள்ளதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...