மாவோயிஸ்ட்டுகளுக்கு பென்டிரைவ் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் பார்த்திபன் என்பரை விடுதலை செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு

கோவை மத்திய சிறையில் உள்ள மாவோயிஸ்ட்டுகளுக்கு பென் டிரைவ் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த பார்த்திபன் என்பரை விடுதலை செய்யக்கோரி, பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கடந்த ஜூன் மாதம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் அனூப் மற்றும் சைனா ஆகியோரிடம், ஆடையில் மறைத்துச் சென்று பென் டிரைவ் கொடுக்க முயன்றதாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரஷீது மற்றும் ஹரிஹர சர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பென் டிரைவ் கொடுத்து அனுப்பியதாக கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன், கடந்த 11-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பார்த்திபன் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதிந்துள்ளதாகவும், அவரை விடுதலை செய்யக்கோரியும் தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பந்தயசாலை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த தினேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'உக்கடம் பகுதியில் மக்களுக்கு இடையூறாக விநாயகர் சதுர்த்தி விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்க சென்ற பார்த்திபன் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும், மக்களுக்காக போராடுபவர்களை ஒடுக்கும் வகையில் காவல் துறையினர் செயல்படுகின்றனர்' என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...