தமிழக ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புகார்

தமிழகத்தில் உள்ள 4 ஆயிரம் ஊராட்சிகளுக்கு 6 மாதங்களாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள ஒரு விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 4 ஆயிரம் ஊராட்சிகளுக்கு 6 மாதங்களாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளுக்கு தரமற்ற குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளது. எல்.இ.டி பல்புகள் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஊழல் முறைகேடுகளும் நடந்துள்ளது. 

ஊழல் முறைகேடுகளுக்கு காரணமான ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருகின்ற 29-ம் தேதி கருப்புப்பட்டை அணிந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜக்டோ, ஜியோ அமைப்பு சார்பில் நடத்தும் போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் 30 ஆயிரம் பேர் பங்கேற்பர்.

இவ்வாறு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் பேட்டியளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...