தமிழக ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புகார்

தமிழகத்தில் உள்ள 4 ஆயிரம் ஊராட்சிகளுக்கு 6 மாதங்களாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள ஒரு விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 4 ஆயிரம் ஊராட்சிகளுக்கு 6 மாதங்களாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளுக்கு தரமற்ற குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளது. எல்.இ.டி பல்புகள் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஊழல் முறைகேடுகளும் நடந்துள்ளது. 

ஊழல் முறைகேடுகளுக்கு காரணமான ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருகின்ற 29-ம் தேதி கருப்புப்பட்டை அணிந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜக்டோ, ஜியோ அமைப்பு சார்பில் நடத்தும் போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் 30 ஆயிரம் பேர் பங்கேற்பர்.

இவ்வாறு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் பேட்டியளித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...