அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு- சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம்

அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டுமென்பதை ஒட்டுமொத்த அதிமுகவினரும் எதிர்நோக்கி காத்திருப்பதாக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் தெரிவித்துள்ளார்.

கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்தவருமான எட்டிமடை சண்முகம், சுந்தராபுரம் பகுதியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருப்பது மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த அறிவிப்பு 8 மாத மனக்குமறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அவரது மரணம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வாக அமையும்.

ஜெயலலிதா வாழ்ந்த இடமான வேதா இல்லம் என்பது அதிமுக-வினருக்கு கோவில் போன்றது. இதனை தரிசிக்க அனைவருக்கும் அனுமதி வழங்கி இருப்பது மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி அடைய செய்துள்ளது. மேலும், ஜெயலலிதாவின் இல்லம் மற்றும் சொத்துக்களை உரிமை கொண்டாட தனிமனிதர்களுக்கு உரிமை கிடையாது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டுமென்பதை ஒட்டுமொத்த அதிமுக-வினரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இவ்வாறு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்தவருமான எட்டிமடை சண்முகம் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...