கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் புதிய ஆம்புலன்ஸ் வசதி இன்று துவக்கம்


கோவை, சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் புதிய ஆம்புலன்ஸ் வசதி இன்று துவங்கப்பட்டது. இதனை கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.



இது குறித்து அவர் பேசுகையில்; கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் அவசர காலத்திற்கு பயன்படும் வகையில் 108 இலவச அவசர சிகிச்சை ஊர்த்தி இன்று தொடங்கப்பட்டுள்ளது. விபத்துகளில் உள்ள நோயாளிகளின் உடலை ட்ரான்ஸ்போர்ட் செய்வதற்கான அனைத்து வசதியும் இந்த புதிய ஆம்புலன்ஸில் பொருத்தப்பட்டுள்ளது. சாலை விபத்திலோ அல்லது மற்ற இடங்களில் ஏற்படும் விபத்திலோ நேரில் சென்று நோயாளிகளை காப்பாற்றுவதற்கான பிரத்தியேக ஸ்டக்ச்சர் வசதி கொண்டுள்ளது. மேலும், இதில் கழுத்தில் ஏற்படும் விபத்துக்கு நெக் பிளாக், காலில் ஏற்படும் காயங்களுக்கு வீல் சேர் வசதிகள் உள்ளது.



மேலும், அவசர தேவைக்கான அனைத்து முதலுதவி மருந்துகளும், ஆக்சிஜன் சப்ளை மற்றும் அனைத்து கருவிகளையும் சார்ஜ் செய்யும் வகையில் டிசி கரண்ட் சப்ளை வசதிகள், ஜெனரேட்டர் வசதி, குளுக்கோ மீட்டர் போன்ற முக்கிய கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.



இதில், ஒரு வாகன ஓட்டுனர் மற்றும் அவசர தொழில்நுட்பவியலாளர் உள்ளனர். இவர்கள் நோயாளிகளின் உயிரை பாதுகாக்க உதவுகின்றனர். எனவே, விபத்து ஏற்பட்டுள்ள சுழ்நிலையில், நோயாளிகளின் உயிரை காப்பாற்ற இந்த புதிய ஆம்புலன்ஸ் வசதியை 108 எண் மூலமாக பொதுமக்கள் அழைக்கலாம். இந்த புதிய ஆம்புலன்ஸ் வசதியை ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி.



இவ்வாறு கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.சுவாமிநாதன் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...