மாநகராட்சிக்கு உட்பட்ட 1.47 ஏக்கர் நிலம் மீட்பு

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவைக்குட்பட்ட 5 மண்டலங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட 1.47 ஏக்கர் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்கப்பட்டு சுத்தம் செய்து மாநகராட்சியின் பெயர் பலகை வைக்கப்பட்டது.



கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.33, காளப்பட்டி, அசோகா நகரில் 23.43 சென்ட் பரப்பும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட, வடவள்ளி, வார்டு எண்.16, ஜி.பி.கார்டன் பகுதியில் உள்ள 13.68 சென்ட் பரப்பும், வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வெள்ளக்கிணர், வார்டு எண்.43 அதிர்ஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் உள்ள 75.70 சென்ட் பரப்பும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குனியமுத்தூர், வார்டு எண்.87 பாரதிநகர் பகுதியில் உள்ள 6 சென்ட் பரப்பும் மற்றும் மத்திய மண்டலத்திற்குட்பட்ட கணபதி, வார்டு எண்.48 செல்வ குமாரசாமி நகர் பகுதியில் உள்ள 28.02 சென்ட் பரப்பும் ஆகமொத்தம் 1.47 ஏக்கர் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு பகுதிகள் மீட்க்கப்பட்டு, சுத்தம் செய்து, மாநராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.



மேலும், மாநகராட்சியின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமையும் பொது ஒதுக்கீடு இடங்கள் சம்பந்தமாக, உரிய ஆய்வு செய்து தொடந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர்க்கு, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...