குடிசைமாற்று வாரியத்தில் வீடு பெற ரூ.36 ஆயிரம் கேட்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு

25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இடத்தில் இருந்து வெளியேற அதிகாரிகள் மிரட்டுவதாகவும், குடிசை மாற்று வாரிய வீடு வழங்க 36 ஆயிரம் ரூபாயினை அதிகாரிகள் கேட்பதாகவும் கூறி 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை வி.எச் சாலை சி.எம்.சி காலனி பகுதியில் துப்புரவு பணியாளர்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மட்டசாலை என்ற பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீடு கட்ட கடந்த 2014-ம் ஆண்டு 377 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிலையில் இதுவரை அப்பகுதி வீடுகளுக்கு மின்சார வசதி செய்து தரப்படவில்லை.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் இதுவரை நாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படாத நிலையில் தற்போது சிலர் குடிசை மாற்று வாரியம் மூலமாக வீடு வழங்க 4 நாட்களுக்குள் 36 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மிரட்டல் விடுத்து வருகின்றனர். 



மேலும், இதில் விருப்பம் இல்லாத மக்கள் வெள்ளலூருக்கு செல்லுமாறும் அதிகாரிகள் மிரட்டல் விடுக்கின்றனர். இதனால், தங்கள் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் தற்போதுள்ள அதே இடத்தில் புதிய வீடுகள் கட்டி மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...