பாட்டிலோடு வந்தவரால் பரபரப்பு- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரக்க பரக்க ஓடிய காவலர்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்களன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு அளிப்பர்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சூலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் பட்டா பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயற்சித்தனர். அவர்களை அங்கிருந்து காவலர்கள் தடுத்து இச்செயலுக்கு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு வருபர்கள் தீவிர சோதனைக்கு பிறகே மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று வழக்கம் போல் எல்லாருடைய உடைமைகளையும் சோதித்து காவலர்கள் அனுமதி அளித்துக் கொண்டிருந்தபோது பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் ஒரு பாட்டிலில் குடிநீருடன் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.



அவர் கொண்டு வந்த பாட்டிலில் மண்ணெண்ணை இருப்பதாகக் கருதி அங்கு பணியில் இருந்த ஆய்வாளர், உதவி ஆணையர் மற்றும் காவலர்கள் ஓடியதால் அவர்களுக்கு பின்னாலேயே பத்திரிகையாளர்களும் சென்றனர். பின்னர் லட்சுமணன் கொண்டு வந்திருந்தது குடி தண்ணீர் என்பதைத் தெரிந்த காவலர்கள் அசடு வழிந்தனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...