பாட்டிலோடு வந்தவரால் பரபரப்பு- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரக்க பரக்க ஓடிய காவலர்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்களன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு அளிப்பர்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சூலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் பட்டா பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயற்சித்தனர். அவர்களை அங்கிருந்து காவலர்கள் தடுத்து இச்செயலுக்கு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு வருபர்கள் தீவிர சோதனைக்கு பிறகே மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று வழக்கம் போல் எல்லாருடைய உடைமைகளையும் சோதித்து காவலர்கள் அனுமதி அளித்துக் கொண்டிருந்தபோது பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் ஒரு பாட்டிலில் குடிநீருடன் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.



அவர் கொண்டு வந்த பாட்டிலில் மண்ணெண்ணை இருப்பதாகக் கருதி அங்கு பணியில் இருந்த ஆய்வாளர், உதவி ஆணையர் மற்றும் காவலர்கள் ஓடியதால் அவர்களுக்கு பின்னாலேயே பத்திரிகையாளர்களும் சென்றனர். பின்னர் லட்சுமணன் கொண்டு வந்திருந்தது குடி தண்ணீர் என்பதைத் தெரிந்த காவலர்கள் அசடு வழிந்தனர். 

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...