மது போதையில் வாகனம் ஓட்டிய 1500 பேரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது - போக்குவரத்து துணை ஆணையர் துரை தகவல்

கோவை மாநகரில் விபத்தினை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று போலீசார் அறிவித்திருந்தனர். 

இந்த நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உரிமங்களை ரத்து செய்ய சம்மந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் துரை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வாகனத் தனிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகனத்தனிக்கையின் போது தொடர்ச்சியாக மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் கண்டு அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய சம்மந்தப்பட்ட ஆர்.டி.ஓ.-க்கு காவல்துறை தரப்பில் இருந்து பரிந்துரை செய்யப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கி இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

தொடர்ந்து வார இறுதி நாட்களில் இந்த வாகனத்தனிக்கை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...