மர்மமுறையில் மாணவர் உயிரிழப்பு : எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

கோவை, சக்தி சாலையில் செயல்பட்டு வரும் எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாணவர் உயிரிழந்தது குறித்து கல்லூரி நிர்வாகம் இன்று வரை வெளியில் கூறாமல் இருந்ததையடுத்து இன்று காலை அக்கல்லூரியைச் சேர்ந்த சக மாணவர்கள் ஒன்றிணைந்து வகுப்பை புறக்கணித்து கல்லூரியின் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரசாந்த் என்னும் மாணவர் எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் துறையில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தீடீரென கல்லூரியின் விடுதியில் உயிரிழந்துள்ளார். ஆனால், பிரசாந்த் தற்கொலை செய்து உயிரிழக்கவில்லை என சக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, பிரசாந்த் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாகவும், இறந்து இரண்டு நாட்கள் கடந்தும் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை எனவும் கூறி அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் வகுப்பை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், கல்லூரி முதல்வர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் பேசுகையில், மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன், மாணவர் உயிரிழப்பில் உள்ள சந்தேகத்தை ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும் எனவும், காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு வகுப்பிற்குச் சென்றனர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...