நீலகிரியில் மாவட்ட ஆட்சியர் போல் பேசி பணம் பறித்த பல குரல் மன்னன் கைது

நீலகிரி மாவட்டம் உதகை ஷில்பங்க் பகுதியில் உள்ள பிரபல ஓட்டல் மற்றும் சேரிங்கிராஸ் பகுதியில் செயல்பட்டு வரும் பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களில் மாவட்ட ஆட்சியர் குரலில் பேசி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம், உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக ஒருவர் மாவட்ட ஆட்சியரின் பெயரைக் கூறிக்கொண்டு பணம் பெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து, பி1 காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சந்தானம் (45) என்னும் நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அரக்கோணம் பகுதியில் வசிக்கும் பிரம்மநாயகம் என்பவரது மகன் சந்தானம் என்பதும், சொந்த ஊர் திருநெல்வேலி என்பதும் தெரியவந்தது. மேலும், இவரின் மீது மதுரை, திருப்பூர், நாமக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் மோசடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

எந்த மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்கிறார்களோ அங்கு சென்று பிரபலமான இடங்களில் ஆட்சியர் போல பல குரல்களில் பேசி மோசடி செய்வதில் கை தேர்ந்தவர் என கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, நீண்டகாலமாக மோசடியில் ஈடுபட்டுவந்த பலகுரல் மன்னன் சநதானம் கைது செய்யப்பட்டார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...