கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி சி.இ.ஒ நியமனம் தொடர்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்


கோவையை ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டத்திற்கும் அனுபவம் இல்லாத ஒருவரை முதன்மை செயல் அலுவலராக பணி நியமனம் செய்ததாக கூறி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கோவை மாநகரை ஸ்மார்ட் சிட்டியாக மத்திய அரசு அறிவித்த நிலையில் சுமார் 1500 கோடி மதிப்பிலான அத்திட்டத்திற்கு முதன்மை செயல் அலுவலராக சுகன்யா என்பரை நியமனம் செய்ததற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம். இதனை கண்டித்து தெற்கு தாலுகா அலுவலகம் முன்பாக பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எவ்வித முன் அனுபவம் இல்லாத சுகன்யா என்பவரை கோவை மாநகர ஸ்மார்ட் சிட்டி முதன்மை செயல் அலுவலராக நியமித்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பனர் கே.பி.ராஜூ என்பவரின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக சுகன்யாவை நியமித்துள்ளதாக புகார் தெரிவித்தார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரிந்துரைத்தின் பேரில் சி.இ.ஒ வாக நியமித்த மாநகராட்சி ஆணையர் விஜயகாத்திகேயன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். இத்துறையில் அனுபவம் மிக்க ஒருவரை தேர்வு செய்து பணி அமர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், சுகன்யா அப்பொருப்பில் இருந்து நீக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...