உதகையில் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் காவலர் அணிவகுப்பு பேரணி

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் இன்று அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.



வரும் ஞாயிற்றுகிழமை உதகையில் ஸ்ரீவிநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலத்தில் ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோருடன் சுமார் 500 காவலர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த பேரணி அசம்பளி திரையங்கம் அருகில் தொடங்கி சேரிங்கிராஸ், காபி அவுஸ் சதுக்கம், மாரியம்மன் கோவில், மெயின் பஜார் வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதேப்போல் காந்தல் பகுதியிலும் அணிவகுப்புப் பேரணி நடைபெற்றது.



நாளை (ஆகஸ்ட் 25) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரின் பல்வேறு இடங்களில் வழிபாட்டிற்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு உதகை காமராஜர் அணையில் கரைப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு பணியாகவே தற்போது காவல்துறையின் அணிவகுப்பு நடைபெற்றது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...