கோவை மாநகராட்சி சார்பாக செவிலியர்களுக்கு டெங்கு நோய் ஆரம்ப குறிப்புகள் பற்றி மேலாண்மை கருத்தரங்கம்

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக, கோவை மாநகராட்சி சார்பாக பல்வேறு நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று (ஆகஸ்ட் 23) கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில், உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் நேமிநாதன், அரசு மருத்துவமனை செவிலியர்கள், நகர்நல மையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு, டெங்கு நோயின் ஆரம்ப குறிப்புகள் மேலாண்மை கருத்தரங்கம் நடத்தினார்கள்.

இந்த கருத்தரங்கத்தில், காய்ச்சலை எவ்வாறு பிரித்து கண்டறிவது, எந்த வகை காய்ச்சலை தொடர் சிகிச்சைக்காக உயர் மையத்திற்கு அனுப்புவது, காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ஐசியு-வில் உரிய சிகிச்சை மேற்கொள்ளுவது என்பது பற்றி மருத்துவர் நேமிநாதன் பல்வேறு ஆலோசனைகளை செவிலியர்களுக்கு வழங்கினார்.

இக்கூட்டத்தில், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...