விவேகம் திரைப்படத்தில் அஜித்தின் சிக்ஸ் பேக் கண்டு வியந்த ரசிகர்கள்

விவேகம் திரைப்படம் அஜித் நடிப்பில் இயக்குனர் சிவாவுடன் ஹாட்ரிக் படமாக அமைந்துள்ளது. அஜித்தின் இரண்டு வருட கடின உழைப்பிற்கு பிறகு இப்படம் இன்று திரைக்கு வந்தது. படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். அக்‌ஷரா ஹாசன் மற்றும் விவேக் ஓப்ராய் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்ய ஜோதி தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித் முதல்முறையாக சிக்ஸ் பேக் தோற்றத்துடன் நடித்துள்ளது ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.



இது குறித்து கோவை தீனா அஜித் ரசிகர் நற்பணிமன்றம் தலைவர் ராஜா கூறுகையில், அஜித் நடித்து தற்போது வெளிவந்துள்ள விவேகம் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும், திருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதை வந்தது இல்லை. ஹாலிவுட் அளவில் இப்படம் தமிழில் இன்று வெளிவந்துள்ளது.



இயக்குநர் சிவா ஒரு வித்தியாசமான கதையை நடிகர் அஜித்துக்கு இப்படத்தில் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் முக்கியமாக அஜித் சிக்ஸ் பேக் வைத்து நடித்தது ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது. ரொம்ப கடினமா இந்த படத்திற்கு தன்னை அற்பணித்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த திருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக, பைக் ஸ்டண்ட்ல அஜித்துக்கு இணையா யாரும் நடிக்க முடியாது' என்றார்.



இயக்குநர் சிவாவுடன் நடிகர் அஜித்துக்கு இது மூன்றாவது வெற்றிப்படமாக உள்ளது. நடிகர் அஜித்தின் விவேகம் திரைப்படம் இன்று வெளியானதைத் தொடர்ந்து, கோவை தீனா அஜித் ரசிகர் நற்பணிமன்றம் சார்பில் மரம் நடப்பட்டும், பட்டாசு வெடித்தும், ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திருவிழாவைப் போல் இன்று கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...