போத்தனூர் ரயில் நிலையத்தில் செயலி மூலம் செயல்படும் டேக்சி சேவை அறிமுகம்

கோவை வடக்கு மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களில் சேலம் மண்டலம், தெற்கு ரயில்வேத் துறையின் சார்பில் செயலி மூலம் செயல்படும் டாக்சி சேவை இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் போதிய வாகன சேவையின்றியும், அவ்வாறு கிடைக்கப்பெரும் டாக்சிகளிலும் அதிகப்படியான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் தெரிவித்து வந்தனர். அதனை போக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு டேக்சி சேவையினை பூர்த்திசெய்யும் வகையிலும் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் இன்று செயலி மூலம் செயல்படும் டாக்சி சேவை மையம் திறக்கப்பட்டது .



போத்தனூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரயில்நிலைய மேலாளர் ஜெயக்குமார் நாயர் பங்கேற்று மையத்தினை திறந்து வைத்தார். கோவை வடக்கு ரயில் நிலையத்தில் நடைபெற்ற செயலி அறிமுக விழாவில் அந்த ரயில் நிலைய மேலாளர் ரவீந்திரன் பங்கேற்று டேக்சி செயலிக்கான மையத்தினை திறந்து வைத்தார். இதில், கோ டேக்சி மற்றும் ரெட் டேக்சி நிறுவனம் இணைந்து செயல்படவுள்ளன.



மேற்குறிப்பிட் இரண்டு ரயில் நிலையங்களிலும் 850 கார்கள் செயல்படவுள்ள நிலையில், இதன் மூலம் ஆண்டுக்கு 16 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கார்களை நிறுத்துவதற்காக மட்டும் போத்தனூர் ரயில் நிலையத்தில் 480 சதுர மீ  இடமும், கோவை வடக்கு ரயில் நிலையத்தில் 400 சதுர மீ  இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் செயலியில் இடம்பெற்றுள்ள கார்கர் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...