உலக புகைப்படம் தினத்தையொட்டி "பிக்சல் பெர்பெக்ட்" புகைப்படம் போட்டி

உலக புகைப்படம் தினத்தை கொண்டாடும் வகையில் ஆர்ட் ஹூஸ் கேலரி மற்றும் பாலிடால் உடன் இணைந்து "பிக்சல் பெர்பெக்ட்" என்ற தலைப்பில் புகைப்படம் போட்டியை கோயம்புத்தூர் ஜென்னீஸ் ரெசிடென்சியில் நடைபெற்றது.



இப்போட்டியில், "தண்ணீர்" என்ற கருப்பொருள் சம்மந்தமாக புகைப்பட போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஹரியானா, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான், பீகார், கஜியாபாத், கோவா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.



கோயம்புத்தூரில் முதல் முறையாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் பாலிடால் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் பொன்சானா டேவிட், போட்டியில் வெற்றிபெற்ற முதல் மூன்று போட்டியாளர்களுக்கு பரிசுத் தொகையை வழங்கினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஐ பிளானட் ஆதரவு அளித்து மற்ற போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசுகளை வழங்கியது.



இதில், 23 பேர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் இறுதியாக மூன்று வெற்றியாளர்களாக சீனிவாசன், கே.ஜெயராம் மற்றும் காயத்ரி தேவி ஆகியோர் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைவரும் அவர்களை பாராட்டினர். 



இந்நிகழ்வில், சிஎம்டி ஆர்ட் ஹவுஸ் மற்றும் ஊட்டி தண்டர் வேர்ல்ட் நிறுவனர் வின்சென்ட் அடைகலராஜ், இந்த நிகழ்விற்கு கலந்து கொண்ட புகைப்பட கலைஞர்கள் இந்தியாயில் உள்ள மிகவும் சுவாரஸ்யமான வழிகளில் நீர் கருப்பொருளை படமாய்க் கொண்டு காட்சிப்படுத்தினர். இந்த நிகழ்வானது தேசிய புகைப்படத் தரவரிசைகளை உருவாக்குவதன் மூலம் இளம் புகைப்படங்களை ஊக்குவிக்கவும் வழிவகுக்கும் என்றார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...