வால்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட்டில் ஒற்றை காட்டு யானை தாக்கி வேலுச்சாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் கடந்த ஒருவார காலமாக ஒற்றை காட்டு யானை மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.



இந்நிலையில் இன்று கருமலை எஸ்டேட் பகுதியில் நேற்றைய தினம் இறந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக அப்பகுதியில் உள்ள மயான பகுதிக்கு ஊர்பொதுமக்கள் அனைவரும் சென்றுள்ளனர். அப்பொழுது திடீரென்று அருகே உள்ள காட்டிற்குள் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென அனைவரையும் துரத்தியுள்ளது.

இதில் வேலுச்சாமி (62) என்பவரை தனது துதிக்கையால் இழுத்த யானை தொடர்ந்து அவரை மிதித்து கொன்றது. இதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனிடையே, தகவலறிந்தும் சம்பவ இடத்திற்கு விரைந்து வராத வனத்துறையினரைக் கண்டித்து அப்பகுதியில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் நேரில் வரும்வரை உடலை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த விடமாட்டோம் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.



மேலும் உயிரை பலிகொண்ட காட்டு யானை அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒற்றை காட்டு யானையை உடனடியாக கும்கி யானை வரவழைத்து பிடிக்கவும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...