'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்'- ஈஷாவில் மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு பேரணி

'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' என்பது நமது நாட்டில் ஓடும் ஆறுகளை மீட்டெடுத்து புத்துயிர் அளிப்பதற்கான முயற்சிகளில் ஒன்றாகும். நதிகளை மீட்கும் விழிப்புணர்வை நாடுமுழுவதும் ஏற்படுத்துவதற்காக, ஈஷா நிறுவனர் சத்குரு கோவையிலிருந்து கன்னியாகுமரி வழியாக ஹரித்வார் வரை 16 மாநிலங்களுக்கு, 32 நகரங்களுக்கு தாமே வாகனம் ஓட்டிசெல்ல உள்ளார்.

செப்டம்பர் 3-ம் தேதியன்று தொடங்கும் இந்த பேரணி, அக்டோபர் 2-ம் தேதி புதுதில்லியில் நிறைவடையும். அக்டோபர் 2-ம் தேதி அரசாங்கத்திடம் நதிகளை மீட்கும் கொள்கை பரிந்துரை முன்வைக்கப்படும். இந்த கொள்கை பரிந்துரை, நமது நதிகளின் இரு புறத்திலும் வனப்பகுதிக்கான தொழில்நுட்ப மற்றும் பொருளியல் திட்டத்தை உள்ளடக்கியது.

இந்த பயணத்தின் போது சத்குரு, 16 மாநிலங்களின் முதலமைச்சர்களையும் சந்தித்து நதிகளை மீட்பதற்கான அவரது பரிந்துரைகளை ஒப்படைக்கவுள்ளார். 

இந்த முயற்சிக்கு விளையாட்டு, சினிமா, கார்ப்பரேட் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்து துறைகளிலிருந்தும் பலர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு நதிகளை மீட்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக, ஈஷா யோகா மையத்தின் தன்னார்வத் தொண்டர்கள் 27 ஆகஸ்ட் (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4:30 மணிமுதல் 5:30 மணிவரை 112 அடி ஆதியோகி சிலையிலிருந்து ஈஷா யோகா மையத்தின் நுழைவு வாயிலான சர்ப்ப வாசல் வரை மனித சங்கிலி அமைத்தனர்.



இதில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் நம் நதிகளின் இன்றைய நிலையை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்கள், கைவினை பொருட்கள் மற்றும் அட்டைகளை ஏந்தி நின்றார்கள். மேலும் 80009 80009 என்ற எண் வடிவத்தில் நின்றனர்.



Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...