பல்வேறு விமர்சனங்களைத் தொடர்ந்து பதவி விலகிய கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் முதன்மை செயல் அலுவலர்

கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரி மாநில அளவில் விளம்பரம் செய்யப்பட்டு, பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் 1ம் தேதியன்று நேர்காணல் நடத்தப்பட்டு ஆர்.சுகன்யா என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

இவருக்கு கடந்த 4ம் தேதியிட்ட பணி நியமன ஆணை வழங்கப்பட்டு ஆகஸ்ட் 11ம் தேதியன்று கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், முதன்மை செயல் அலுவலர் ஆர்.சுகன்யா, மேலாண்மை இயக்குநருக்கு முகவரியிட்ட கடிதத்தில், "தான் மேற்படி பதவிக்கு முழு தகுதியுடன் எவ்வித விதிமீறல்களும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டதாகவும், விரும்பத்தகாத விமர்சனங்கள் தொடர்ந்து வருவதால் மேற்கொண்டு இப்பணியில் தொடர விரும்பவில்லை எனவும் தனது பணி விலகலை ஏற்றுக்கொள்ளுமாறும்" தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இவரது பணி விலகல் கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய முதன்மை செயல் அலுவலர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக கோவை மாநகராட்சி ஆணையரும், கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநனருமான க.விஜயகார்த்திகேயன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...