மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கான புதிய முறையில் கேஎம்சிஎச் வெற்றி

கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை, ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சையில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த முறை, சிறுநீரகவியல் துறை, விரிவான ஆராய்ச்சிக்குப்பின் ஒரு சிக்கலான பிரச்சனையை தீர்க்க புதிய வழிமுறைகளை கண்டறிந்துள்ளது.



ஒரு 18 வயது வாலிபன், வலியுடனும், வாந்தியுடனும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடப்பதற்கு கூட முடியாத நிலையில் இருந்த அவரை பரிசோதனை செய்தபோது, சிறுநீரக இயக்கம் மோசமாக இருந்தது தெரியவந்தது. கால்சியம் பற்றாக்குறையால் எலும்புகள் பலவீனமடைந்து, சிறுநீரகம் சுருங்கி, அதை மாற்ற வேண்டிய நிலையில் இருந்தது. உடனடியாக அவருக்கு டயாலிஸஸ் சிகிச்சையின் மூலம் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டது. அவரது தாயின் ரத்தமும், அவரது ரத்தமும் ஒத்துபோனபோதிலும் அவரது தாய்க்கு சர்க்கரை வியாதி இருந்ததால் அவரால் சிறுநீரக தானம் தரமுடியாது. இருப்பினும் அவரது தந்தையின் சிறுநீரகம் நல்ல முறையில் இருந்தாலும், ரத்த வகை நோயாளியுடன் பொருந்தவில்லை.

ரத்த வகை பொருந்தாமல் இருப்பினும் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்ற நிலையில், சிறுவனுக்கு உள்ள தீய வகை எதிர் உயிரிகளை நீக்க, தீவிர பிளாஸ்மா மாற்று சிகிச்சை தொடரப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்மா மாற்று  சிகிச்சை  செய்வதால் த்தப்போக்கு அதிகம் எற்படும். இந்த நோயாளிக்கு பலமுறை தொடர்ந்து பிளாஸ்மா மாற்று சிகிச்சை தேவைப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தி தரும் இம்யூனோகுளோபின்களின் இழப்பு, தொற்றுநோய் வருவதற்கும் ஒரு வாய்ப்பாகவும் அமையும். ரத்த தொற்றுநோயுடன் கூடிய இந்த நோயளிக்கு இம்யூனோகுளோபின் மற்றும் பிளாஸ்மா மாற்றம் செய்வது அதிக செலவை ஏற்படுத்தும். இத்தகைய பல பிரச்சனைகளால் அவர் கவலையடைந்தார். 

இத்தகைய ரத்த வகை பொருத்தமில்லா சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில், அவருக்கு ’இம்யூனோ–அட்சார்ப்ஷன்’ எனப்படும், நோய் எதிர்ப்பு சக்தி கிரகித்தல் முறையை அறிவுறுத்தினோம். ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே உள்ள இந்த தொழில்நுட்பத்தில், உடலுக்கு தீய்மைவிளைவிக்கும் எதிர் உயிர்கள் மட்டும் நீக்கப்படும்  தன்மைக்கொண்டது. ரத்தப்போக்கு, தொற்றுநோய் அல்லது ரத்தப்பொருட்கள் நீக்கம் செய்ய வேண்டிய சிக்கல்கள் இல்லை. 

சட்டப்பூர்வமான நடைமுறைகளுக்குப்பின், ஒரு முறை நோய் எதிர்ப்பு சக்தி கிரகித்தில் சிகிச்சை தரப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான முறைகளுக்கு ஆய்வக காரணிகள் பொருத்தப்பட்டன. அவருக்கு அடுத்த நாளே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, உடனடியாக அவரது சிறுநீரகம் செயல்பட துவங்கியது. ஒரு மாதத்துக்குப் பின் வழக்கமான முறையில் அவரது சிறுநீரகம் செயல்பட்டு வலி நீங்கி நடக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார், இன்னும் இரண்டு மாதங்களில் அவர் கல்லுாரிக்கு செல்லவிருக்கிறார். 



கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, சிறுநீரகவியல் துறை ஆலோசகர் டாக்டர் மங்கலகுமார் மற்றும் அவரது குழுவினரை பாராட்டினார். இதுகுறித்து நல்ல ஜி பழனிசாமி கூறுகையில், ஒருங்கிணைந்த தொடர்ச்சியான மருத்துவ கல்வி பெற்று வரும் மருத்துவம் சார்ந்த குழுக்கள், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த பெரிதும் உதவியுள்ளது. சிக்கலான பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவியுள்ளது. கேஎம்சிஎச் மருத்துவமனையின் தரத்தை மேலும் உயரச் செய்து வருகிறது என்றார்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...