சேலம் தெற்கு ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு பரிசோதனையில் ஒரே நாளில் அதிக தொகை வசூலித்து சாதனை

ரயில்பயணிகள் ரயில்பயணத்தின் போது தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதையும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்வதை தடுக்கவும், தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் திடீர் பயணச்சீட்டு பரிசோதனை போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. 

கடந்த வார இறுதியில் தொடர்ந்து 3 விடுமுறை நாட்கள் வருவதால் ரயில்களில் அதிக கூட்டம் இருப்பதால் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதை உத்தேசித்து சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஏ.விஜுவின் தலைமையில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் 41 ரயில்களில், 46 வணிகவியல் பிரிவு ஊழியர்கள், 11 ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் கொண்ட ஒரு குழு, 26.08,2017 நள்ளிரவு 12 மணி முதல் 27.08,2017 நள்ளிரவு 12 மணி வரை 24 மணிநேரத்திற்கு சிறப்பு பயணச்சீட்டு பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

இதில் 4,69,342 ரூபாய் பயணச்சீட்டு தொகை மற்றும் அபராதமாக 1089 பேர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது. இதுவே சேலம் கோட்டத்தில் ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட பயணச்சீட்டு சோதனையில் வசூலிக்கப்பட்ட அதிக பட்ச தொகையாகும். இதற்கு முன்னதாக 02.04.2017 அன்று நடத்தப்பட்ட இது போன்ற ஒரு சோதனையின் போது 3,37,595 ரூபாய் வசூலிக்கப்பட்டதே அதிக பட்சமாக இருந்தது. இந்த சோதனைகளில் சிறப்பாக செயல்பட்ட வணிகவியல் பிரிவு ஊழியர்கள் பி. செல்வகுமார், பி. ராமச்சந்திரன், ஜே.மோகன்ராஜ் மற்றும் இதர வணிகவியல் பிரிவு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பாராட்டிய சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா இது போன்ற பயணச்சீட்டு சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு பயணச்சீட்டின்றி பயணிப்பதை குறைக்குமாறு அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...