சேலம் தெற்கு ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு பரிசோதனையில் ஒரே நாளில் அதிக தொகை வசூலித்து சாதனை

ரயில்பயணிகள் ரயில்பயணத்தின் போது தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதையும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்வதை தடுக்கவும், தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் திடீர் பயணச்சீட்டு பரிசோதனை போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. 

கடந்த வார இறுதியில் தொடர்ந்து 3 விடுமுறை நாட்கள் வருவதால் ரயில்களில் அதிக கூட்டம் இருப்பதால் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதை உத்தேசித்து சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஏ.விஜுவின் தலைமையில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் 41 ரயில்களில், 46 வணிகவியல் பிரிவு ஊழியர்கள், 11 ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் கொண்ட ஒரு குழு, 26.08,2017 நள்ளிரவு 12 மணி முதல் 27.08,2017 நள்ளிரவு 12 மணி வரை 24 மணிநேரத்திற்கு சிறப்பு பயணச்சீட்டு பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

இதில் 4,69,342 ரூபாய் பயணச்சீட்டு தொகை மற்றும் அபராதமாக 1089 பேர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது. இதுவே சேலம் கோட்டத்தில் ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட பயணச்சீட்டு சோதனையில் வசூலிக்கப்பட்ட அதிக பட்ச தொகையாகும். இதற்கு முன்னதாக 02.04.2017 அன்று நடத்தப்பட்ட இது போன்ற ஒரு சோதனையின் போது 3,37,595 ரூபாய் வசூலிக்கப்பட்டதே அதிக பட்சமாக இருந்தது. இந்த சோதனைகளில் சிறப்பாக செயல்பட்ட வணிகவியல் பிரிவு ஊழியர்கள் பி. செல்வகுமார், பி. ராமச்சந்திரன், ஜே.மோகன்ராஜ் மற்றும் இதர வணிகவியல் பிரிவு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பாராட்டிய சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா இது போன்ற பயணச்சீட்டு சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு பயணச்சீட்டின்றி பயணிப்பதை குறைக்குமாறு அறிவுறுத்தினார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...