டி.டி.வி. தினகரனின் நியமனங்கள் எதுவும் செல்லாது- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி



டி.டி.வி.தினகரன் திமுக-வுடன் உறவு வைத்துக்கொண்டு செயல்படுகின்றார் எனவும் அவரது நியமனங்கள் எதுவும் செல்லாது என கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

கோவை விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சிச் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"நாங்கள் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள். ஜெயலலிதாவின் விசுவாசிகளை டி.டி.வி.தினகரன் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி வருகின்றார். இது செல்லாது. தினகரன் உத்திரவிற்கு அதிமுக கட்டுப்படாது. தனியாக தினகரன் பேரவை என துவங்கி அதில் உள்ளவர்களை நீக்கட்டும்.

தினகரன் திமுக-வுடன் உறவு வைத்துக்கொண்டு செயல்படுகின்றார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு எம்.எல்.ஏ-க்களை தவிர அனைவரும் கலந்து கொண்டனர். நாஞ்சில் சம்பத் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. மேகதாது விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டனர். தினகரனால் நியமிக்கப்பட்டவர்களின் பதவிகள் எதுவும் செல்லாது". இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...