டி.டி.வி.தினகரன் பயத்தால் அதிமுகவினரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குகிறார்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி



ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

"மாவட்ட செயலாளர் பதவிக்கு முறையாக வந்தவர்கள் நாங்கள். டி.டி.வி.தினகரனுக்கு வந்துள்ள பயத்தால் அமைச்சர்களையும், அதிமுக-வில் பொறுப்பில் உள்ளவர்களையும் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி வருகிறார். 

தேர்தல் கமிஷன் அறிவிப்பிக்கு பிறகு தான் கட்சி அதிகாரம் யாருக்கு உள்ளது என்று தெரியவரும். தற்போது நடைபெற்ற கூட்டத்தில் சசிகலா குறித்து எதுவும் பேசவில்லை. பொதுவான விஷயங்கள் குறித்துதான் பேசப்பட்டது. 

இரட்டை இலையை மீட்கும் நடவடிக்கையில் மூத்த அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். சின்னம் விரைவில் மீட்கப்படும். எம்எல்ஏக்கள் இடையே பேரம் எதுவும் நடக்கவில்லை. கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகியோர் தனி அமைப்பு நடத்துவதால் அவர்களுடைய நிலைப்பாட்டை அவர்கள் தான் அறிவிக்க வேண்டும். தற்போது தேர்தல் நடந்தால் வாக்களிக்க மக்களும் தயாராக இல்லை, எம்.எல்.ஏ-க்களும் தயாராக இல்லை. அடிக்கடி வாக்களிக்க யாரும் விரும்பமாட்டார்கள்" என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...