மகளிர் திட்டம் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வேளாண்மை அலகு (மகளிர் திட்டம்) மூலம் வேலைவாய்ப்பு வழங்கும் முன்னணி தொழில் நிறுவனங்களைக் கொண்டு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 1ம் தேதியன்று காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள கற்பகம் பல்கலைக் கழக வளாகம், திருமந்திரம் கலையரங்கத்தில் நடைபெறவுள்ள இந்த இலவச வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-வது முதல் பட்டயப்படிப்பு, தொழில்நுட்பக் கல்வி, இளங்கலை மற்றும் முதுகலை பயின்றவர்கள் தங்களது சுயவிபரம், கல்வி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, இதர தகுதி சான்று அசல் மற்றும் நகல்கல் மற்றும் புகைப்படங்களுடன் கலந்து கொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...