ஆக்கிரமிப்பில் உள்ள வெள்ளலூர் குளம் வாய்க்காலை மீட்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மனு


வெள்ளலூர் குளம் வாய்க்காலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், குளக்கரையில் மிக அருகில் உள்ள வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து நடவடிக்கை கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு குளங்கள் மற்றும் நீர்நிலைகளை காக்கும் பணியில் கடந்த ஏழு மாதங்களாக ஈடுபட்டு வருகிறது. அந்த பணிகளின் பொழுது வெள்ளலூர் குளமும் சரிசெய்யப்பட்டது. ராஜவாய்க்கால் சரிசெய்யப்பட்டதால் கரையோரம் உள்ள வீடுகள் இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் சூழல் உள்ளது.

குளத்திற்கு நீர் வரும் வழித்தடம் தொடர்பாக 28.03.2017 அன்று தங்கள் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்ட கலந்தாய்வில் கலந்துகொண்டோம். அந்த கலந்தாய்வில் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியரால் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை பெய்து மழைநீரூம் சித்திரைச்சாவடி அணைக்கட்டை அடைந்துவிட்டது. மேலும் குறிச்சி குளத்தின் கரையோரத்தில் சாலை வசதி செய்வதற்காக தோண்டப்பட்ட மண் நீர்வரும் வழியில் அடைப்பு ஏற்படுத்தியுள்ளது. உக்கடம் குளத்திற்கு நீர்வரும் வழித்தடத்திலும் அடைப்புகள் உள்ளன. எனவே, போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், நீர்வழித்தடங்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுத்து நீர்நிலைகளை காக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

இவ்வாறு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...