கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவு படுத்த கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவு படுத்த கோரியும் பாலத்தின் அளவை குறைக்கும் நடவடிக்கையினை கைவிடக்கோரியும் அப்பகுதி மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்

கோவை ஆவாரம்பாளையம் - கணபதி பகுதியில் உள்ள ரயில்வே பாதையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடந்து நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். 

இந்நிலையில், மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சர்வீஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக காலதாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், அப்பகுதியில் அமைக்கப்பட இருக்கும் பாலத்தின் அளவை குறைக்க நெடுஞ்சாலைதுறை முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகின்றது. இதை கண்டித்து கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது மேம்பால பணிகளை விரைந்து துவங்க வேண்டும் எனவும், பாலத்தின் அளவை குறைக்கும் நடவடிக்கையினை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கலந்து கொண்டார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...