ஸ்மார்ட் சிட்டியை வடிவமைக்க கோவை வந்தனர் டில்லி கட்டிடக்கலை கல்லூரி மாணவர்கள்

கோவையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கான பணி துரிதமாக நடைபெற்று வரும் வேளையில், நகரத்தை ஸ்மார்ட் சிட்டியாக்குவதில் உள்ள சாதகம் மற்றும் பாதகங்களை ஆய்வு செய்யும் வகையில் டில்லி கட்டிடக்கலை மற்றும் திட்ட மேலாண்மை கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கோவை வந்துள்ளனர். 

நகர திட்டமைப்புத் துறையின் பேராசிரியருடன் கோவை வந்த 32 மாணவர்கள் 5 குழுக்களாக பிரிந்து இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து, 15 நாட்கள் உள்ளூர் திட்டக் குழுமத்துடன் இணைந்து ஆய்வு நடத்தி திட்ட அறிக்கையை மாணவர்கள் சமர்ப்பிக்கின்றனர். 

மேலும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் தலை சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்தில் சேமிப்புக்கிடங்கு அமைப்பது குறித்தும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...