தமிழகத்தில் தற்போது நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் திமுகவும் ஒரு காரணம் -பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்


ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களே ஆளுநரை குறை சொல்வார்கள் எனவும் தமிழகத்தில் தற்போதைக்கு தேர்தல் வர வாய்ப்பில்லை எனவும் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிட முடியாது என ஆளுநர் கூறி உள்ளது சரி எனவும், தமிழக அரசியல் நிலவரத்திற்கு ஏற்ப ஆளுநர் முடிவு செய்வார். எதிர்கட்சியினர் விருப்படி ஆளுநர் நடந்து கொள்ள முடியாது எனவும் சட்ட விதிகளின் படியே ஆளுநர் நடந்து கொள்வதாக தெரிவித்தார். 

திமுகவை சேர்ந்தவர்கள் ஆளுநரை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியவர், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களே ஆளுநரை குறை சொல்வார்கள் என குற்றம்சாட்டினார். மேலும் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர்கள் சந்திப்பது என்பது அரசு சார்பாகவும் நிதி உதவி கேட்டுபதும், தவிர கட்சி பிரச்சினைகள் தொடர்பாக கிடையாது எனவும் இரட்டை சின்னத்தை மீட்பது தொடர்பாக மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பு நிகழவில்லை எனவும் தெரிவித்தார்

கட்சி பிரச்சனைகளை புறந்தள்ளிவிட்டு தமிழக அரசு நிர்வாகத்தை ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும் என்றவர், இதை தனது கோரிக்கையாக முதல்வருக்கு வைப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கட்சியின் உட்கட்சி விவகாரங்களை கவனித்துக் கொள்ள தனியாக அமைச்சர்களை நியமிக்க வேண்டும் எனவும் அப்போதுதான் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவும் தற்போதைய ஆளும் கட்சிக்கு மாற்றாக திமுக இருக்க முடியாது என்று கூறினார். 

தமிழகத்தில் தற்போது நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் திமுகவும் ஒரு காரணம் என கூறினார். ஒரு வேளை தேர்தல் வரும் பட்சத்தில் திமுக வெற்றிப்பெறும் என கருத்து கணிப்புகள் சொல்லுவது தொடர்பான கேள்விக்கு தேர்தல் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தற்போதைய சூழலில் தேர்தல் வர வாய்ப்பில்லை எனவும் தமிழிசை தெரிவித்தார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...