அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது எனக் கூறுவது ஆளுநரின் பொறுப்புக்கும் பதவிக்கும் உகந்ததல்ல என துரைமுருகன் பேட்டி


அதிமுக எம்.எல்.ஏக்கள் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ள நிலையில் உட்கட்சி தகராறு அதில் தலையிட முடியாது என கவர்னர் சொல்லி இருப்பது அவருடைய பொறுப்புக்கும் பதவிக்கும் உகந்ததல்ல என திமுக சட்டமன்ற எதிர் கட்சித்துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் திமுக சட்டமன்ற எதிர் கட்சித்துணை தலைவருமான துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அதிமுகவில் உள்ள 19 எம்.எல்.ஏக்களும் தனி தனியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்துள்ளனர் எனவும், ஒ.பி.எஸ் தலைமையில் 9 எம்.எல்.ஏக்கள் வெளியேறிய போது மெஜாரிட்டியை நிருபிக்க வேண்டும் என தெரிவித்த ஆளுநர் தற்போதைய சூழ்நிலையில் 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள நிலையில் இது உட்கட்சி தகராறு தலையிட முடியாது என சொல்லி இருப்பது அவருடைய பொறுப்புக்கும் பதவிக்கும் உகந்ததல்ல என தெரிவித்தார்.

ஆளுநர் மெளனம் சாதிப்பதற்கு உள்நோக்கம் எதுவும் இருக்கின்றதா என்பதை அவரிடம் கேட்க வேண்டும் என தெரிவித்த அவர், மத்திய அரசின் தலையீடு இல்லாமல் ஆளுநர் செயல்பட மாட்டார் எனவும் தெரிவித்தார். ஆளுநர் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என தெரிவித்தவர் தனக்கு கவர்னர் மீது இன்னமும் நம்பிக்கை இருப்பதாக துரைமுருகன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...