தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்: ஜவஹிருல்லா, தலைவர்-மனித நேய மக்கள் கட்சி


ஆளுநர் வித்யாசாகர்   ராவ்வை எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் சந்தித்து  சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா தெரிவித்தார்.

மியான்மர் நாட்டிலுள்ள முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும், அம்னிஸ்டி சர்வதேச பொதுமன்னிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக மியான்மர் ராணுவம் ரோகிந்தியா பகுதியில் முஸ்லீம்களை அழித்து வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறது.

அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற ஆங் சுவான் சுகி மியான்மருடைய அதிபராக இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் இனப்படுகொலைகள்

நடத்தப்படுவதாகவும், சர்வதேச நாடுகள் இந்த படுகொலைகள் குறித்து அமைதிகாத்து வருவதாக கூறியவர், இந்தியா அரசு உடனடியாக மியான்மரை கண்டிக்க வேண்டும் என்றவர் மியான்மர் உடனான தூதரகத்தை திரும்பபெறவேண்டும் என்றார். மேலும்.இது குறித்து ஐ நா மனித உரிமை அமைப்புக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும்  ஜவஹிருல்லா தெரிவித்தார். 

இன்று காலை திமுக, சிபிஎம், விடுதலை. சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தமிழக பொறுப்பு  ஆளுநரை பார்த்து சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் எனவும்  எடப்பாடி அரசின் மீது சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை  நடக்க உத்திரவிட கூறியதாக தெரிவித்தார். ஜனநாயகத்தை காப்பதற்காகவும், அரசியல் அமைப்பை காப்பதற்காகவும் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...